தடைகளை உடைப்பேன்
பயணத்தை தொடர்வேன்
பக்குவமாய் நான் பரிணமிப்பேன் ..ii
அறிவுக் கடலதில் நீந்தி
முத்ததைபெற்றே
கல்விக் கரைதனில் நானும் தடம் பதிப்பேன்...ii
இறையெனக்களித்த அருட்கொடையொன்றே
நான் நிழலாய் தொடர்ந்த ஆசானே ...ii
வாழ்க வளம்பெற....ii
வாழ்த்தும் இவள் உன் சேய் நானே...॥
இருளில் மூழ்கினேன்
இழுத்தெடுத்தாயே
அறிவொளியில் நானும் கண்திறந்தேன்.
எட்டுத் திக்கும் கற்றால் ஜெயமென
உயிருக்குள் உணர்வதை ஊற்றிவிட்டாய் - என்
உயிருக்குள் உணர்வதை ஊற்றிவிட்டாய்
இனி நான் பறப்பேன்
வானினைத் தொடுவேன்
உன் பெயர் காப்பேன் ஆசானே..!
கல்விப் புலத்தின்
கலங்கரை விளக்காய்
கண்ணியத்திற்காய் உரமாவேன்.-உந்தன்
கண்ணியத்திற்காய் உரமாவேன்.
0 Comments